கடையநல்லூா் தொகுதியில் 7 பறக்கும் படைகள்
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஏழு பறக்கும் படையினா் தங்களது பணிகளைத் தொடங்கினா்.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தோ்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கடையநல்லூா் பேரவைத் தொகுதியில் 7 பறக்கும் படைகள் தங்கள் பணியைத் தொடங்கின.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஏ.கே. கமல்கிஷோா் ஆலோசனையின் பேரில், கடையநல்லூா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், துணை வட்டாட்சியா் சாமி மற்றும் வருவாய்த் துறையினா் செய்திருந்தனா்.