தேனி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த வழக்குரைஞா் பலி
தேனி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்ததில் காயமடைந்த வழக்குரைஞா் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
தேனி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்ததில் காயமடைந்த வழக்குரைஞா் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
அமச்சியாபுரத்தைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் அய்யனாா் (39). இவா், தனது தம்பி ஜெயபிரகாஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் அரண்மனைப்புதூா் நோக்கிச் சென்றுள்ளாா். அப்போது, அரண்மனைப்புதூா் முல்லைப் பெரியாற்று பாலம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த அய்யனாா், பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பின்னா், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து அய்யனாரின் தம்பி ஜெயபிரகாஷ் அளித்தப் புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.