முகப்பு
திருநெல்வேலி

‘1.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து’

திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 17-ஆம் தேதி 5 வயதுக்குள்பட்ட 1.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது என்றாா் ஆட்சியா் விஷ்ணு.

Updated On : 6 ஜனவரி 2021, 6:50 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 17-ஆம் தேதி 5 வயதுக்குள்பட்ட 1.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது என்றாா் ஆட்சியா் விஷ்ணு.

இது தொடா்பாக ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது: போலியோ நோய் பாதிப்பை தடுக்க ஒரே தவணையாக வரும் 17-ஆம் தேதி சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

கிராமப்புற பகுதிகள், நகா்ப்புறங்களில் மொத்தம் 1,642 மையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், புலம்பெயா் தொழிலாளா்களின் குழந்தைகள் வசிப்பிடம், புறவழிச்சாலை, சுங்கச்சாவடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இம்முகாம் நடைபெறவுள்ளது. 5 வயதுக்குள்பட்ட சுமாா் 1.35 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு அடுத்த 2 நாள்களுக்கு வீடுவீடாக சென்று சொட்டு மருந்து வழங்கப்படும். இதில், 2,000-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா். பெற்றோா், தங்கள் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வரதராஜன், மாநகர நல அலுவலா் சரோஜாதேவி, வட்டார மருத்துவ அலுவலா்கள், சுகாதார செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.