வாழ்க்கையைக் கெடுத்த 3 எழுத்து இட்லி நடிகை... குற்றம் சுமத்திய ரவி மோகன்!
நடிகர் ரவி மோகன் குற்றம் சுமத்திய 3 எழுத்துகொண்ட நடிகை குறித்து...
நடிகர் ரவி மோகன் 3 எழுத்துகொண்ட ஹிந்தி நடிகை தனது வாழ்க்கையைக் கெடுத்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து பெற்ற பிறகே தான் நடிக்க வருவேன் எனக் கூறியுள்ள ரவி மோகன் 3 எழுத்துகொண்ட ஹிந்தி நடிகையை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்திக்கு இடையே 2024 செப்டம்பரில் விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இருப்பினும் இவர்களது வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
Advertisement
கெனிஷா சமூக வலைதளத்தை விட்டும் சென்னையை விட்டும் தற்காலிகமாகச் செல்வதாக அறிவித்திருந்தார். சைபர் வன்முறை நடந்ததால்தான் கெனிஷா இப்போது விலகியுள்ளதாக ரவி மோகன் குற்றம்சுமத்தியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் ரவி மோகன் 3 எழுத்துகொண்ட ஹிந்தி நடிகையைக் குறிப்பிட்டு கூறியதாவது:
சில விஷயங்களை தெளிவாகக் கூற வேண்டும். 3 எழுத்து கொண்ட நடிகையை நான் பலமுறை கூறியுள்ளேன். பெயரைச் சொன்னால் வழக்குப் பதியப்படும் என்பார்கள். அந்த இட்லி நடிகையைதான் கூறுகிறேன்.
அந்த நடிகையின் தலைமுறையைச் சேர்ந்த 3 நடிகர்கள் என்னிடம் ‘அந்த நடிகையால் எங்களது குடும்பத்தை கெடுக்க வந்த இவ அவள் என அசிங்கமான வார்த்தையில் கூறினார்கள்’. மூன்று பேரின் வாழ்க்கையைக் கெடுக்க தயாராக இருந்த அந்த பொம்பள என்னைக் குறை சொல்கிறார். வேறு எதாவது பிரச்னை வந்தால் அப்படியே பெண்ணியம் என ஒரு நாடகம் நடத்துவார்.
என்னைப் பற்றி பேச துப்பு இருக்கிறதா? எப்படித்தான் இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் என்றே புரியவிலை. நான் யார்? நீ யார்? தனிப்பட்ட விதத்தில் தொடாதே. என்னை விட நன்றாக நடிக்கிறாயா நடித்துக்கொள். விருது வாங்கிப்பதென்றால் வாங்கிக்கொள். நானே காலில் விழுகிறேன். ஆனால், என்னை தவறானவன் என்று கூற நீ யார்? நீ என்னைப் பெற்றெடுத்தாயா? பிளடி எனக் கூறினார்.
இந்த நடிகை யாராக இருக்கும் என்ற விவாதம் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.