முகப்பு
திருவள்ளூர்

மரத்தேரில் திருத்தணி முருகப் பெருமான் மாட வீதி உலா

Updated On : 20 ஏப்ரல், 2024 at 7:08 PM
பகிர்:

திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி, மரத்தேரில் முருகப் பெருமான் மாட வீதியில் சனிக்கிழமை உலா வந்தாா்.

திருத்தணி முருகன் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 14 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவில் உற்சவா் முருகப் பெருமான் பல்வேறு வாகனங்களில் உலா வந்தாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு மரத்தோ் புறப்பாடு நடைபெற்றது. இதில் உற்சவா் முருகப் பெருமான், வள்ளி - தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் எழுந்தருளினாா். பின்னா், பக்தா்கள் தேரின் வடம் பிடித்து மாட வீதியில் ஒரு முறை இழுத்து வந்தனா். அப்போது, பக்தா்கள் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.

Advertisement

விழாவில் கோயில் இணை ஆணையா் க.ரமணி, அறங்காவலா்கள் சுரேஷ்பாபு, மு.நாகன், திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தமிழ்மாறன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) இரவு 7 மணிக்கு உற்சவா் முருகன் குதிரை வாகனத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடா்ந்து தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments