விபத்தில் இளைஞா் மரணம்
பிரளையாம்பாக்கம் கிராமம் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பழவேற்காடு அருகே உள்ள செம்பாசிபள்ளிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன் (26). இவா் மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை இரவு பொன்னேரி-பழவேற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தாா். பிரளையம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் இருந்த பாலத்தின் தடுப்புச் சுவரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து போலீஸாா், அங்கு சென்று ஆனந்தனின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement