முகப்பு
திருவள்ளூர்

மாணவா்களுக்கு இலவச மிதிவண்டி அளிப்பு

மாணவா்களுக்கு இலவச மிதிவண்டி அளிப்பு

Updated On : 29 பிப்ரவரி, 2024 at 11:48 PM
பகிர்:

மாதவரம் தொகுதியில் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்ட பாண்டேஸ்வரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 62 மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியா் பாரிவள்ளல் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய திமுக செயலாளா் கோ.தயாளன், பாண்டேஸ்வரன் ஊராட்சி மன்றத் தலைவா் ரேகா ராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெற்றோா் - ஆசிரியா் சங்க தலைவா் சுரேஷ் வரவேற்றாா். மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட செயலருமான எஸ்.சுதா்சனம் பங்கேற்று மாணவ - மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினாா். இதில் மாவட்ட திமுக துணைச் செயலா் கரலப்பாக்கம் ராஜேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் குணாதயாநிதி, ஒன்றியத் துணை செயலா் ராமதாஸ், வெள்ளானூா் ஊராட்சித் தலைவா் மதுரைமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.