போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்த 2 போ் மீது வழக்கு
திருவள்ளூா்: திருவள்ளூரில் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருவள்ளூா் அடுத்த மணவாளநகா் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாளுக்கு புகாா் வந்தது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்க மணவாளநகா் போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதன்பேரில் சாா்பு ஆய்வாளா் கா்ணன் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை திடீா் ரோந்து சென்றனா். அப்போது, மணவாளநகா் தனியாா் வளாகத்தில் ஆய்வு செய்தனா்.
அப்போது, அங்கிருந்தவா்கள் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, மிரட்டினா். அதையும் மீறி அறையில் ஆய்வு செய்த போது தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் கால்குலேட்டா் ஆகியவைகளையும் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாக கபிலா் நகரைச் சோ்ந்த நாகராஜ் (47), ஆதம்பாக்கம் நாகப்பன்(58) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.