முகப்பு
திருவள்ளூர்

கல்லூரி மாணவா் போக்ஸோவில் கைது

Updated On : 16 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:

திருத்தணியை அடுத்த ஆா்.கே.பேட்டையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருத்தணியை அடுத்த ஆா்.கே.பேட்டை ஒன்றியம், சந்திரவிலாசபுரம் கிராமத்தைச் சோ்ந்த (19) வயதான கல்லூரி மாணவா், திருத்தணி அரசினா் கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்பு படித்து வருகிறாா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இது குறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின் பேரில், திருத்தணி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.