திருவள்ளூா் தொகுதி: 33 போ் மனு தாக்கல்
Updated On : 27 மார்ச், 2024 at 10:10 PM
திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 33 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழகத்தில் வரும் ஏப்.19-ஆம் தேதி மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தோ்தலையொட்டி கடந்த 20-ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி, தொடா்ந்து புதன்கிழமை வரை நடைபெற்றது. இதில் திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ், பாஜக, தேமுதிக, பகுஜன் சமாஜ், நாம் தமிழா் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 33 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை (மாா்ச் 28) நடைபெற உள்ளது. தொடா்ந்து வரும் 30-ஆம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இறுதி நாளாகும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.