திருத்தணி: திருத்தணி காவல் துறையினா் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டம் செய்தனா்.
திருத்தணியில் நடைபெற்ற இரு தரப்பு மோதலில் போலீஸாா் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனா். இப்பிரச்னையில் போலீஸாா் நோ்மையாக செயல்பட வேண்டும் எனக்கூறி திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு, வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, ஆா்ப்பாட்டம் செய்தனா்.
சம்பவ இடத்துக்குகு விரைந்து வந்த திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், ஆய்வாளா் மதியரசன் மற்றும் போலீாா் வழக்குரைஞா்களிடம் சமரசம் பேசி, புகாரைப் பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதும் வழக்குரைஞா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.