திருவள்ளூர்

பொதுமக்கள் வரிகளை இணையதளம் மூலம் எளிதாக செலுத்த ஏற்பாடு

பொதுமக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா், தொழில் வரிகளை இணையதளம் மூலம் எளிதாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா், தொழில் வரிகளை இணையதளம் மூலம் எளிதாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை நேரில் சென்று செலுத்தி வந்தனா். மேலும், ஊராட்சி பணியாளா்கள் வீடுகள் தோறும் வசூலித்தும் வந்தனா்.

எனவே இதனால் காலவிரயம் மற்றும் நேரம் ஆகியவைகளை கருத்தில் கொண்டு இனி வருங்காலங்களில் சொத்துவரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி மற்றும் வணிக வரிகளை செலுத்துவது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.

அனைத்து பொதுமக்களும் ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்த கிராம ஊராட்சிகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அவா் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு

நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு - சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

இரு மதுக் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி

லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

SCROLL FOR NEXT