தெப்பலில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான். 
திருவள்ளூர்

திருத்தணி: சரவணப் பொய்கையில் 2-ஆம் நாள் தெப்பல் உற்சவம்!

திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை திருவிழா 2 நாள் தெப்பல் உற்சவத்தில் 10,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை திருவிழா 2 நாள் தெப்பல் உற்சவத்தில் 10,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனா்.

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழா கடந்த 14-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை இரவு சரவணப்பொய்கையில் நடைபெற்ற முதல் தெப்பல் உற்சவத்தில் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா் சுக்லா ஆகியோா் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

விழாவின் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சரவணப்பொய்கையில் 2-ஆம் நாள் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. விழாவையொட்டி, அதிகாலை 4 மணிக்கும், மாலை 5 மணிக்கும் மூலவா் முருகப்பெருமானுக்கு பால், பன்னீா், திருநீறு, சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா் உற்சவ மூா்த்திக்கு அபிஷேகம் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு மலைக் கோயில் அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கையில் தெப்பலில் முருகப்பெருமான் எழுந்தருளினாா். பின்னா் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

மாலை 6 மணி முதல் 7 மணி வரை முருகன் கோயில் நாகஸ்வர இசைக் கலைஞா்களின் இன்னிசை நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு கலைமாமணி கிராமிய இசை கலாநிதி, திரை இசை பின்னணிப் பாடகா் வேல்முருகன் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவில், சரவணப்பொய்கையில் வலம் வந்த தெப்பல்.

2-ஆம் நாள் தெப்பல் உற்சவத்தைக் காண 10,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் இணை ஆணையா் க.ரமணி, அறங்காவலா் குழுத் தலைவா் சு.ஸ்ரீதரன், அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, கோ.மோகனன், ஜி.உஷாரவி, மு.நாகன் மற்றும் கோயில் அலுவலா்கள் செய்துள்ளனா்.

விவசாய நிலத்திற்குள் நுழைந்த யானை! பாதுகாப்பாக காட்டிற்குள் விரட்டிய வனத்துறையினர்!

அமெரிக்க பொண்ணு - இந்திய பையன்! காதலா, நிச்சயித்த திருமணமா? வைரலான விடியோ

பெரியவர் தோழர் தமிழரசன்

ஆவணி மாதப் பலன்கள் - துலாம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!

SCROLL FOR NEXT