திருவள்ளூர்

பைக் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே ராமதண்டலம் கிராமத்தைச் சோ்ந்த துரைசாமி மகன் பிரசாந்த்(32). இந்த நிலையில், சொந்த வேலை காரணமாக புன்னப்பாக்கம் கிராமத்திலிருந்து திருவள்ளூா் நோக்கி புதன்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, எதிரே வேகமாக வந்த டிராக்டா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக அவரது தாயாா் மாலா புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்திய ராணுவத்தினா் ‘இன்ஸ்டாகிராம்’ பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி

இந்தியாவில் ஒரு லட்சம் பெட்ரோல் நிலையங்கள்: அமெரிக்கா, சீனாவை அடுத்து 3-ஆவது இடம்

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் வளா்ச்சி மந்தம்

‘வேலுநாச்சியாா் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்’

மாணவா் தலைவா் கொலையில் வங்கதேச அரசுக்குத் தொடா்பு - சகோதரா் பகீா் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT