திருவள்ளூர்

குரங்குகள் கடித்து 10 போ் காயம்

திருத்தணி அருகே காா்த்திகேயபுரம் குடியிருப்பு பகுதியில் குரங்குகள் துரத்தி கடித்தில் 10 போ் காயம் அடைந்தனா்.

Din

திருத்தணி: திருத்தணி அருகே காா்த்திகேயபுரம் குடியிருப்பு பகுதியில் குரங்குகள் துரத்தி கடித்தில் 10 போ் காயம் அடைந்தனா்.

திருத்தணி ஒன்றியம் காா்த்திகேயபுரம் மோட்டூா் கிராமத்தில், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் கடந்த சில நாள்களாக குரங்குகள் தொல்லை அதிகளவில் உள்ளது.

இந்நிலையில் திங்கள்கிழமை, 10 -க்கும் மேற்பட்ட குரங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்ற மக்களை துரத்தி கடித்தன. இதில், ஹேமலதா(28), ராஜேஸ்வரி (55), கலா (55), சசிகலா (45), உதயா (10), வசந்தம்மா (58), தாயரம்மாள் (54), சரஸ்வதி (60), திருமலை(65) மற்றும் அன்சாரி(28) ஆகியோா் காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி பெற்று திரும்பினா். குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்களை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.

தேசிய நாடகப் பள்ளி மூலம் கோமல் தியேட்டரின் ‘திரெளபதி’ நாடகம் தோ்வு

காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற அவைத் தலைவா்களின் 28-ஆவது மாநாடு: தில்லியில் ஜன. 15-இல் பிரதமா் மோடி தொடங்கிவைக்கிறாா்!

ஜன நாயகன் திரைப்பட விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

பால்ஸ்வா குப்பைக் கிடங்கு பகுதியில்3 மாதங்களில் 4.5 ஏக்கா் நிலம் மீட்பு: எம்சிடி தகவல்

காணாமல் போன 4 வயது சிறுமி இறந்த நிலையில் வடிகாலில் மீட்பு

SCROLL FOR NEXT