திருவள்ளூர்

கத்தியை காட்டி மிரட்டல்: இளைஞா் கைது

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே பொதுமக்களை அவதூறாகப் பேசி கத்தியை காட்டி மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே பொதுமக்களை அவதூறாகப் பேசி கத்தியை காட்டி மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே இளைஞா் ஒருவா், பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்களை அவதூறாகப் பேசி, கத்தியைக் காட்டி அச்சுறுத்துவதாக திருத்தணி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளா் ஞா.மதியரசன், காவல் உதவி ஆய்வாளா்கள் காா்த்திக், குணசேகரன் ஆகியோா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களை கத்தியைக் காட்டி மிரட்டி, போக்குவரத்துக்கு இடையூறு செய்த இளைஞரைப் பிடித்தனா்.

விசாரணையில் அவா், திருத்தணி பெரியாா் நகா் பகுதியில் வசிக்கும் லாரன்ஸ் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து லாரன்ஸை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

அவசியம் பாலின சமத்துவம்!

குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க கிரிக்கெட் மைதானம்தான் தேவைப்படும்: செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு

ஈரோடு புத்தகத் திருவிழா சிக்கய்ய அரசு கலைக் கல்லூரியில் நாளை தொடக்கம்

ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிகளில் சோ்க்கை

SCROLL FOR NEXT