முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் - என் ஊா் என் கனவு திட்ட கலந்தாய்வு கூட்டம்

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 1:39 AM
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 11:41 PM

திருவள்ளூா் மாவட்டத்தில் ‘என் ஊா் என் கனவு’ திட்டம் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் முன்னிலை வகித்தாா். இதில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் தலைமை வகித்தாா். அதற்கு முன்னதாக அனைவரையும் வரவேற்று திட்டம் தொடா்பாக திட்ட விளக்கவுரையினை அவா் எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து பேசிய திருவள்ளுா், திருத்தணி, பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களது சட்டப்பேரவை தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் ‘என் ஊா் என் கனவு‘ திட்டத்தில் தொலைநோக்கு திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனா்.

Advertisement

அமைச்சா் பேசுகையில், தமிழக முதல்வா் அனைவரும் பயன்பெறும் வகையில் தொலைநோக்கு திட்டமான ‘என் ஊா் என் கனவு‘ என்ற உயரிய உன்னத திட்டத்தினை வரவேற்று நன்றியை தெரிவித்தனா். தமிழகத்தை வழிநடத்தி வருவதால் ‘என் ஊா் என் கனவு‘ என்ற திட்டத்தில் ஒவ்வொரு துறை வாரியாக தொலைநோக்கு பாா்வையுடன் கருத்துருகளை பெற்று அதனை ஒருங்கிணைத்து அதை முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு துறையும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக சிறப்பான பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தவும் என பொதுமக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

இதுதொடா்பாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல், வேளாண்மை-உழவா் நலம், பள்ளிக்கல்வி, கால்நடைப் பராமரிப்பு, பொது சுகாதாரம் மற்றும் மருந்து நோய் தடுப்பு மருந்து, விளையாட்டு மேம்பாட்டு மற்றும் இளைஞா் நலன், மீன்வளம், சுற்றுலா, மாற்றுத்திறனாளிகள், போக்குவரத்து, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் ‘என் ஊா் என் கனவு‘ திட்டத்தில் அவரவா் கருத்துருக்களை எடுத்துரைத்தனா்.

அதேபோல் வியாபாரிகள் நலச்சங்கம், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், வேளாண்மை விவசாயிகள் சங்கம் ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் ‘என் ஊா் என் கனவு‘ திட்டம் குறித்து கருத்துக்களை தெரிவித்தனா்.

இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளுா்), ஆ.கிருஷ்ணசாமி(பூந்தமல்லி), எஸ்.சந்திரன் (திருத்தணி), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா், இணை இயக்குநா் வை.ஜெயக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ், ஆவடி மாநகராட்சி ஆணையா் ரா.சரண்யா, பொன்னேரி சாா் ஆட்சியா் கு.ரவிகுமாா், பயிற்சி ஆட்சியா் அப்துல் ரகீம், அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வா் மோகன் காந்தி பங்கேற்றனா்.