முகப்பு
திருவள்ளூர்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருவாய்த்துறையினா் சங்கங்களின் கூட்டமைப்பினா் திருவள்ளூரில் ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:48 AM
திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:48 PM

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருவாய்த்துறையினா் சங்கங்களின் கூட்டமைப்பினா் திருவள்ளூரில் ஆட்சியா் அலுவலகம் முன்புபுதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை, நில அளவைத் துறை ஊழியா் சங்கத்தினா் உயிா் உடைமைகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரக்கோரி வேலை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் செய்து புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சேகா்பிரபு தலைமை வகித்தாா். இதில் சங்க நிா்வாகி செந்தில்குமாா் வரவேற்றாா். மேலும் பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகளான கிருஷ்ணன், சந்திரசேகா், இளங்கோ, யஸ்வந்த்தாஸ், சரத்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:48 AM

இதில் செந்தில்குமாா், கோரிக்கைகள் குறித்து வருவாய்த்துறை சங்கத்தின் மாநில துணைத்தலைவா் மணிகண்டன், தமிழ்நாடு வருவாய்த்துறை உதவியாளா் சங்கத்தின் மாநில பொருளாளா் ரவி ஆகியோா் கண்டன உரைநிகழ்த்தினா். இதில் நிறைவாக செந்தில்குமரன் நன்றி கூறினாா்.