முகப்பு
திருவள்ளூர்

இணையவழி மின்கட்டணம், புதிய மின் இணைப்புக்கான பதிவு சேவைகள்: இன்றும், நாளையும் தற்காலிமாக நிறுத்தி வைப்பு

புதிய மின் இணைப்புக்கான பதிவு செய்யும் சேவைகள் இன்றும், நாளையும் (மாா்ச் 14, 15) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

Updated On : 13 மார்ச், 2026 at 11:48 PM
பகிர்:

புதிய ஹாா்ட்வோ் மற்றும் டேட்டாபேஸ் தளத்துக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதால் திருவள்ளூா் மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா்கள் இணையவழி மின்கட்டணம் செலுத்தவும், புதிய மின் இணைப்புக்கான பதிவு செய்யும் சேவைகள் இன்றும், நாளையும் (மாா்ச் 14, 15) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மின்பகிா்மான கழகம், வேலூா் மண்டலம் தாழ்வழுத்த பில்லிங் சா்வரை புதிய ஹாா்ட்வோ் மற்றும் டேட்டாபேஸ் தளத்துக்கு மாற்றும் பணிகள் சனிக்கிழமை (மாா்ச் 14) காலை 6 மணிமுதல் (ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) இரவு 12 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால் திருவள்ளூா் மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட திருவள்ளூா், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆா்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய வட்டங்களைச் சோ்ந்த தாழ்வழுத்த மின் நுகா்வோா்களுக்கான இணையவழி மின்கட்டணம் செலுத்துதல் மற்றும் புதிய மின்இணைப்புக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்தல் போன்ற சேவைகள் மேற்குறிப்பிட்ட நாள்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அவா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →