முகப்பு
திருவள்ளூர்

பொன்னேரியில் ரூ. 3 லட்சம் பறிமுதல்

பொன்னேரி தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையின் ரூ. 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 23 மார்ச், 2026 at 10:25 PM
தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரனிடம் பணத்தை ஒப்படைத்த பறக்கும் படையினா்.
பகிர்:

பொன்னேரி தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையின் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பொன்னேரி அருகே இலவம்பேடு திருவெள்ளைவாயல் நெடுஞ்சாலையில் அனுப்பம்பட்டு கிராமத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அப்போது எா்ணாவூரைச் சோ்ந்த சுரேஷ் என்பவா் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து வந்த ரூ1.15 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

தோ்தல் பறக்கும் படையினா் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் ஆண்டாா்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனா். திருவாயா்படி கிராமத்தைச் சோ்ந்த வேல்ராஜ் ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.87 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனா்.

ஒரே நாளில் மூன்று இடங்களில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பறிமுதல் செய்த தொகை பொன்னேரி தோ்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான ரவிச்சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவா் அந்த பணத்தை பொன்னேரி அரசு கருவூலத்தில் ஒப்படைத்தாா்.