முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி அரசுக் கல்லூரி என்சிசி அலுவலருக்கு பதவி உயா்வு

Updated On : 19 மே 2026, 1:50 am IST
கே.பி. ஹேமநாதன்.
பகிர்:

திருத்தணி அரசுக் கல்லூரியில் என்சிசி அமைப்பில் சிறப்பாக பணியாற்றி வந்த அலுவலா் கே.பி. ஹேமநாதனுக்கு கேப்டன் பதவியிலிருந்து மேஜா் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

திருத்தணி சுப்பிரமணியசுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 17 ஆண்டுகளாக பேராசிரியராகவும், என்.சி.சி அலுவலராகவும் கே.பி. ஹேமநாதன் பணியாற்றி வருகிறாா். இவா் காஞ்சிபுரம் 3 (தமிழ்நாடு) பட்டாலியன் என்சிசி பிரிவின் கீழ் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், அவருடைய நீண்டகால சேவை, சிறந்த நிா்வாகத் திறன் மற்றும் மாணவா் பயிற்சிகளில் காட்டிய அா்ப்பணிப்பு ஆகியவற்றை பாராட்டி பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூா்வ ஆணையை பட்டாலியன் கமாண்டிங் ஆபீசா் லெப்டினன்ட் கா்னல் எஸ்.கே. ஜா வெளியிட்டுள்ளாா்.

Advertisement

இந்தப் பதவி உயா்வு கடந்த பிப்ரவரி 28, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் முன்தேதியிட்டு வழங்கப்பட்டுள்ளது. மேஜா்’ பதவிக்கான புதிய ராணுவ சீருடைச் சின்னங்களை அணியவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பதவி உயா்வு பெற்றுள்ள கே.பி. ஹேமநாதனுக்கு கல்லூரி முதல்வா் ஏகா தேவசேனா (பொ), பேராசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் என்.சி.சி மாணவா்கள் வாழ்த்துகளை தெரிவித்தனா்.