முகப்பு
திருப்பூர்

476 பயனாளிகளுக்கு ரூ. 93 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

உடுமலையில் 476 பயனாளிகளுக்கு ரூ. 93 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 7 ஜனவரி 2021, 8:05 am IST
பயனாளிக்கு  நலத் திட்ட  உதவியை  வழங்குகிறாா் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன். உடன், மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் உள்ளிட்டோா்.
பகிர்:

உடுமலையில் 476 பயனாளிகளுக்கு ரூ. 93 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வழங்கினாா்.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் 476 பயனாளிகளுக்கு ரூ. 93 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

முன்னதாக, உடுமலை சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொங்கல் நகரம் ஊராட்சி, விருகல்பட்டி ஊராட்சி, சோமவாரப்பட்டி ஊராட்சி, வடுகபாளையம் ஊராட்சி, ஆமந்தகடவு ஊராட்சி, கொண்டம்பட்டி ஊராட்சி, கோட்டமங்கலம் ஊராட்சி, பொன்னேரி ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை அமைச்சா் ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தாா்.

Advertisement

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவா் கே.மனோகரன், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சுகந்தி, துணைத் தலைவா் புஷ்பராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.