ஈஐடி பாரி இந்தியா கடன்பத்திரம் மூலம் ரூ.100 கோடி திரட்டுகிறது
முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த ஈஐடி பாரி இந்தியா நிறுவனம் கடன்பத்திரங்கள் மூலம் ரூ.100 கோடியை திரட்டவுள்ளது.
முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த ஈஐடி பாரி இந்தியா நிறுவனம் கடன்பத்திரங்கள் மூலம் ரூ.100 கோடியை திரட்டவுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
விரிவாக்கத் திட்டங்களுக்குத் தேவையான நிதி கடன்பத்திர வெளியீட்டின் மூலம் திரட்டிக் கொள்ளப்பட உள்ளது. இதற்காக, ரூ.100 கோடிக்கு பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திரங்கள் வெளியிடப்படவுள்ளன. தனிப்பட்ட ஒதுக்கீட்டு அடிப்படையில் இந்த கடன்பத்திரங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. கடன்பத்திர வெளியீட்டுக்கான அனுமதியை நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு வழங்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.