வணிகம்

மத்திய அரசின் ஓய்வூதியத் திட்ட கணக்கு தொடங்குவதில் மெர்க்கன்டைல் வங்கி முதலிடம்

DIN


தூத்துக்குடி: மத்திய அரசின் ஓய்வூதியத் திட்ட கணக்கு (அடல் பென்ஷன் யோஜனா) தொடங்குவதில் தனியார் துறை வங்கிகளிலேயே தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து வங்கியின் பொது மேலாளர் சூரியராஜ் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய ஓய்வூதியத் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (அற்ஹப் டங்ய்ள்ண்ர்ய் வர்த்ஹய்ஹ) திட்டத்தின் மூலம் அரசாங்க உத்தரவாத ஓய்வூதியமாக ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.5,000 வரை வழங்கப்படுகிறது.
நிகழ் நிதியாண்டில் அனைத்து வங்கிகளின்  மூலம் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் அரசு நிர்ணயித்த 2500 கணக்கு எண் தொடங்க வேண்டும் என்ற இலக்கை விட கூடுதலாக 371.60 மடங்கு வளர்ச்சியை அளித்து 9290 கணக்குகளை தொடங்கி அனைத்து தனியார் துறை வங்கிகளிலேயே மெர்க்கன்டைல் வங்கி முதலிடம் பெற்றது.
இதன் மூலம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அரசின் அனைத்து நலத் திட்டங்களிலும் முழு உத்வேகத்துடன் பங்கேற்று மக்களுக்கு அளவற்ற சேவையை செய்து வருகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT