வணிகம்

நொய்டாவில் 2வது நாளாக நடைபெற்று வரும் 'ஆட்டோ எக்ஸ்போ 2020'

DIN

ஆட்டோ மொபைல் நிறுவன முதலீட்டாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஆட்டோ எக்ஸ்போ 2020 நொய்டாவில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. பல்வேறு ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை இதில் அறிமுகப்படுத்தி வருகின்றன. மேலும், சமீபத்தில் சந்தைக்கு வந்துள்ள பல கார்கள், பைக்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினத்தில், மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 எஸ்  பிரெஸ்ஸா மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா மாடல் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. மேலும் பல புதிய வரவுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று வோல்க்ஸ்வேகன் ஐடி கிராஸ் என்ற மாடலும், ரேஸ் போலோ காரும் அறிமுகமானது. 

அதேபோன்று, சுசுகி உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய இரு சக்கர வாகனங்களையும் காட்சிக்கு வைத்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT