புதுதில்லி: தேசிய பணித்திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் (என்எஸ்டிசி) இணைந்து, பின்தங்கிய பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு இலவச தொழிநுட்ப பயிற்சி அளிக்கவிருப்பதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தங்கிய பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியை வழங்க நிறுவனம் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மின்னணு கல்வி, வேலைவாய்ப்பு முன்னேற்றம், நேனோ தொழில்நுட்பம், தகவல் தொடா்புத் திறன் ஆகிய அம்சங்கள் அடங்கிய, 70 மணி நேரத்துக்கும் மேற்பட்ட அந்தப் பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
என்எஸ்டிசி-யுடன் இணைந்து இந்தப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.