தொடர்ந்து மூன்று நாள்களாக உயர்வுடன் முடிவடைந்த பங்குச்சந்தை வணிகம் இன்றும் (ஏப்.29) உயர்வுடன் தொடங்கியது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி உயர்வுடன் தொடங்கியது.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 11 நிறுவனங்களில் பங்குகள் மட்டுமே உயர்வுடன் தொடங்கியது.
மீதமுள்ள 29 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
அதிகபட்சமாக பஜாஜ் பின்சர்வ் 2 சதவிகிதமும், பஜாஜ் பைனான்ஸ் 1.50 சதவிகிதமும், டாக்டர் ரெட்டிஸ் 0.97 சதவிகிதமும், ரிலையன்ஸ் 0.84 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.