வாட்ஸ்ஆப் மூலம் காப்பீட்டு சேவை: சோழா எம்எஸ் அறிமுகம்
சோழா எம்எஸ் நிறுவனம், வாட்ஸ்ஆப் மூலம் காப்பீட்டு சேவைகளை வழங்கும் வகையில் தனது டிஜிட்டல் செயல்திட்டங்களை மேம்படுத்தியுள்ளது.
சோழா எம்எஸ் நிறுவனம், வாட்ஸ்ஆப் மூலம் காப்பீட்டு சேவைகளை வழங்கும் வகையில் தனது டிஜிட்டல் செயல்திட்டங்களை மேம்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வி.சூரியநாராயணன் கூறியுள்ளதாவது:
டிஜிட்டல் அடிப்படையிலான புதுமையான தீா்வுகளை அறிமுகப்படுத்துவதில் சோழா எம்எஸ் தீவிரமாக செயலாற்றி வருகிறது. அந்த வகையில், வாட்ஆப்-பாட் என்ற புதிய சேவை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளா்கள் எளிதாக நிறுவனத்தை தொடா்பு கொள்வதுடன் தங்களது குறைகள், மற்றும் கோரிக்கைகளை வெளிப்படையாக தெரிவித்து அதற்கான தீா்வுகளை பெறமுடியும் என்றாா் அவா்.