வணிகம்

மைக்ரோசாஃப்ட்டில் பிழை கண்டறிந்த தில்லி இளம்பெண்: ரூ.22 லட்சம் பரிசு

மைக்ரோசாஃப்டில் இருந்த பிழையை சுட்டிக்காட்டிய 20 வயது இளம்பெண்ணுக்கு அந்நிறுவனம் ரூ.22 லட்சம் பரிசு வழங்கியுள்ளது.

DIN


மைக்ரோசாஃப்டில் இருந்த பிழையை சுட்டிக்காட்டிய 20 வயது இளம்பெண்ணுக்கு அந்நிறுவனம் ரூ.22 லட்சம் பரிசு வழங்கியுள்ளது.

தில்லியைச் சேர்ந்த அவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இதுபோன்று முகநூலில் பிழையைக் கண்டறிந்ததால், ரூ.5.5 லட்சம் ஊக்கத்தொகையாகப் பெற்றுள்ளார்.

தில்லியைச் சேர்ந்த அதிதீ சிங் என்ற 20 வயது இளம் பெண் இணைய பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு மேப் மை இந்தியா நிறுவனத்தில் இணையப் பிழைகளைக் கண்டறிந்ததால், கல்வி ஆவணங்களின்றி அவருக்கு அந்நிறுவனம் பணியாணை வழங்கியது.

இந்நிலையில் தற்போது அவர் மைக்ரோசாஃப் நிறுவனத்தின் ஆர்.இ.சி. எனப்படும் தொலைக் குறியீடு செயல்படுத்துதல் பிரிவில் உள்ள பிழையை கண்டறிந்து அந்நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 

இதனால், அவரைப் பாராட்டும் விதமாக அந்நிறுவனம் 30 ஆயிரம் டாலர் தொகையை பரிசாக அறிவித்தது. இந்திய மதிப்பில் அது ரூ.22 லட்சமாகும். 

இதற்கு முன்பு இவர் முகநூலிலும் பிழையைக் கண்டறிந்து ரூ.5.5 லட்சம் பரிசாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்! - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT