வணிகம்

மைக்ரோசாஃப்ட்டில் பிழை கண்டறிந்த தில்லி இளம்பெண்: ரூ.22 லட்சம் பரிசு

மைக்ரோசாஃப்டில் இருந்த பிழையை சுட்டிக்காட்டிய 20 வயது இளம்பெண்ணுக்கு அந்நிறுவனம் ரூ.22 லட்சம் பரிசு வழங்கியுள்ளது.

DIN


மைக்ரோசாஃப்டில் இருந்த பிழையை சுட்டிக்காட்டிய 20 வயது இளம்பெண்ணுக்கு அந்நிறுவனம் ரூ.22 லட்சம் பரிசு வழங்கியுள்ளது.

தில்லியைச் சேர்ந்த அவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இதுபோன்று முகநூலில் பிழையைக் கண்டறிந்ததால், ரூ.5.5 லட்சம் ஊக்கத்தொகையாகப் பெற்றுள்ளார்.

தில்லியைச் சேர்ந்த அதிதீ சிங் என்ற 20 வயது இளம் பெண் இணைய பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு மேப் மை இந்தியா நிறுவனத்தில் இணையப் பிழைகளைக் கண்டறிந்ததால், கல்வி ஆவணங்களின்றி அவருக்கு அந்நிறுவனம் பணியாணை வழங்கியது.

இந்நிலையில் தற்போது அவர் மைக்ரோசாஃப் நிறுவனத்தின் ஆர்.இ.சி. எனப்படும் தொலைக் குறியீடு செயல்படுத்துதல் பிரிவில் உள்ள பிழையை கண்டறிந்து அந்நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 

இதனால், அவரைப் பாராட்டும் விதமாக அந்நிறுவனம் 30 ஆயிரம் டாலர் தொகையை பரிசாக அறிவித்தது. இந்திய மதிப்பில் அது ரூ.22 லட்சமாகும். 

இதற்கு முன்பு இவர் முகநூலிலும் பிழையைக் கண்டறிந்து ரூ.5.5 லட்சம் பரிசாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயங்களுடன் முதியவா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

மின்சாரம் பாய்ந்து வியாபாரி உயிரிழப்பு

இரும்புக் குழாய் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சுற்றுலாப் பயணிகள் வாகனத்தில் இருந்த பாம்பு

முதல்வா் கோப்பையை வென்ற பாா்வைத்திறன் குறையுடைய மாணவிகளுக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT