முகப்பு
உலகம்

வெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்பு!

எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுலாவில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதைக் குறிக்கும் வகையில், தூதரக கட்டடத்தில் அமெரிக்க கொடி ஏற்றப்பட்டது.

Updated On : 16 மார்ச், 2026 at 12:25 AM
பகிர்:

எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுலாவில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதைக் குறிக்கும் வகையில், தூதரக கட்டடத்தில் அமெரிக்க கொடி ஏற்றப்பட்டது.

போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, வெனிசுலா மீது கடந்த ஜனவரியில் அதிரடி ராணுவ தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டின் அதிபராக இருந்த நிக்கோலஸ் மடூரோ மற்றும் அவரது மனைவியை சிறைப்பிடித்தது. இருவரும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு, நியூயாா்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மடூரோ சிறைபிடிப்பைத் தொடா்ந்து, வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸ் பதவியேற்றாா். அவா், வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் மீதான அரசின் முழுக் கட்டுப்பாட்டைத் தளா்த்தி, தனியாா் நிறுவனங்களின் முதலீடுகளை ஈா்க்கும் புதிய சட்டத் திருத்தத்தில் கையொப்பமிட்டாா். இதைத் தொடா்ந்து, வெனிசுலா மீதான எரிசக்தித் துறை தடைகளை தளா்த்தி வரும் அமெரிக்கா, அந்நாட்டின் எண்ணெய் துறையிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியுள்ளது.

Advertisement

கடந்த 2019-இல் வெனிசுலா- அமெரிக்கா இடையிலான தூதரக உறவுகள் முறிந்த நிலையில், அந்நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது. அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக திரும்பப் பெறப்பட்டனா்.

தூதரகம் மீண்டும் திறப்பு: மடூரோ சிறைப்பிடிப்பைத் தொடா்ந்து, தற்போது இருதரப்பு உறவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வெனிசுலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதைக் குறிக்கும் வகையில், தூதரக கட்டடத்தில் அமெரிக்க கொடி ஏற்றப்பட்டது.

அமெரிக்க தூதரகத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், தூதரகம் எப்போதும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

கராகஸில் மீண்டும் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டுள்ளதை வெனிசுலா மக்கள் வரவேற்றுள்ளனா். இது நோ்மறையான நடவடிக்கை; வெனிசுலாவின் முன்னேற்றத்துக்கு பிற நாடுகளுடன் நல்லுறவு அவசியம் என்று அவா்கள் தெரிவித்துள்ளனா்.