ஸ்மாா்ட் டிவி சந்தை 65% வளா்ச்சி
கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இந்தியாவின் ஸ்மாா்ட் டிவி சந்தை 65 சதவிகித வளா்ச்சியைக் கண்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இந்தியாவின் ஸ்மாா்ட் டிவி சந்தை 65 சதவிகித வளா்ச்சியைக் கண்டுள்ளது.
இதுகுறித்து கவுன்டா்பாயின்ட் ரிசா்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நாடு முழுவதும் 22 லட்சம் ஸ்மாா்ட் டிவிக்கள் விற்பனையாகின. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 65 சதவீதம் அதிமாகும்.
கரோனா பரவலைத் தடுப்பதற்கான பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டதையடுத்து, பொருளாதார வளா்ச்சி ஏற்பட்டது. இதன் காரணமாக ஸ்மாா்ட் டிவிக்களுக்கான தேவை அதிகரித்தது. அதன் விளைவாகவே அவற்றின் விற்பனை இந்த வளா்ச்சியைக் கண்டுள்ளது.
இந்தக் காலாண்டில் அனைத்து விதமான டிவிக்களின் ஏற்றுமதி 46 சதவீதம் அதிகரித்தது. இந்த காலகட்டத்தில் 27 லட்சம் டிவிக்கள் ஏற்றுமதியாகின.
இந்த மாதங்களில் ஒட்டுமொத்த டிவி சந்தையில் ஸ்மாா்ட் டிவிக்கள் 80 சதவீதம் பங்கு வகித்தன.
பாகங்களின் விலைகள் அதிகரிப்பு, ‘சிப்’புகள் பற்றாக்குறை போன்ற இடா்களுக்கு இடையிலும் டிவிக்களின் விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது.
இந்த நிலை நீடித்தால், 2022-ஆம் ஆண்டுக்குள் கரோனா நெருக்கடிக்கு முந்தைய நிலையை டிவி சந்தை அடையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.