டெக் மஹிந்திரா, டிசிஎஸ் பங்குகள் உயர்வு: சென்செக்ஸ் 214 புள்ளிகள் ஏற்றம்
பங்குச்சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 214 புள்ளிகள் வரை உயர்ந்தது.
பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 214 புள்ளிகள் வரை உயர்ந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 214.17 புள்ளிகள் சரிந்து 58,350.53 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.37 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 42.70 புள்ளிகள் சரிந்து 17,388.15 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.25 சதவிகிதம் உயர்வாகும்.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப்பங்குகளில் 18 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் முடிவடைந்தன. அதிகபட்சமாக டெக் மஹிந்திரா 1.97 சதவிகிதமும், டிசிஎஸ் 1.51 சதவிகிதமும், இன்ஃபோசிஸ் 1.44 சதவிகிதமும், ஏசியன் பெயிண்ட்ஸ் 1.29 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டது.