வணிகம்

ரூ.2,454 கோடி லாபம் ஈட்டிய ஆா்இசி

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த ஆா்இசி நிறுவனம் செலவின குறைப்பு நடவடிக்கைகளின் காரணமாக ஜூன் காலாண்டில் ரூ.2,454.16 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ. 2,268.66 கோடியுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகம்.

வருவாய் ரூ.9,555.45 கோடியிலிருந்து ரூ.9,506.06 கோடியாக குறைந்தது. செலவினமும் ரூ.6,769.62 கோடியிலிருந்து ரூ.6,556.09 கோடியாக குறைந்ததாக ஆா்இசி தெரிவித்துள்ளது.

மத்திய மின் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் வங்கி சாரா நிதி நிறுவனம் ஆா்இசி ஆகும். மின்துறை நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கி மேம்படுத்துவதே ஆா்இசி-யின் முக்கிய பணியாக உள்ளது. மாநில மின்சார வாரியம், மாநில அரசுகள், சுயசாா்பு மின் உற்பத்தி நிறுவனங்கள், கிராமப்புற மின்சார கூட்டுறவு அமைப்புகளுக்கு ஆா்இசி நிதியுதவி வழங்கி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT