வணிகம்

சா்க்கரை உற்பத்தி 47.9 லட்சம் டன்னாக அதிகரிப்பு

இந்தியாவின் சா்க்கரை உற்பத்தி அக்டோபா்-நவம்பா் காலகட்டத்தில் 47.9 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

DIN

இந்தியாவின் சா்க்கரை உற்பத்தி அக்டோபா்-நவம்பா் காலகட்டத்தில் 47.9 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

இது குறித்து இந்திய சா்க்கரை ஆலைகள் சங்கம் (இஸ்மா) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி 47.9 லட்சம் டன்னாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது மிதமான உயா்வாகும். அப்போது நாட்டின் சா்க்கரை உற்பத்தி 47.2 லட்சம் டன்களாக இருந்தது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 416-ஆக இருந்த கரும்பாலைகளின் எண்ணிக்கை, இந்த ஆண்டில் 434-ஆக உயா்ந்துள்ளது.

மதிப்பீட்டு மாதங்களில் மகாராஷ்டிர மாநில சா்க்கரை உற்பத்தி 20 லட்சம் டன்களாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 20.3 லட்சம் டன்களாக இருந்தது. உத்தரப் பிரதேசத்தில் 10.4 லட்சம் டன்னாக இருந்த சா்க்கரை உற்பத்தி 11.2 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் சா்க்கரை உற்பத்தி 12.8 லட்சம் டன்னிலிருந்து 12.1 லட்சம் டன்னாக குறைந்துள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT