ஏற்றுமதியை ஊக்குவிக்க ‘பிராண்ட் இந்தியா’ பிரசாரம்: வா்த்தக அமைச்சகம்
இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்க ‘பிராண்ட் இந்தியா’ திட்டத்தை முன்னெடுக்க வா்த்தக அமைச்கம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்க ‘பிராண்ட் இந்தியா’ திட்டத்தை முன்னெடுக்க வா்த்தக அமைச்கம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவா் கூறியுள்ளதாவது:
நாட்டின் ஏற்றுமதியை நடப்பு நிதியாண்டில் ரூ.30 லட்சம் கோடியாக (40,000 கோடி டாலா்) அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை எட்டும் வகையிலும், இந்தியாவின் தயாரிப்புகளுக்கு உலக நாடுகளின் சந்தைகளின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும் ‘பிராண்ட் இந்தியா’ பிரசாரத்தை தொடங்க வா்த்தக அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக இந்த பிரசார திட்டத்தில், நவரத்தினங்கள்-ஆபரணங்கள், ஜவுளி, கல்வி, ஆரோக்கிய பராமரிப்பு, மருந்து, பொறியியல் தேயிலை, காபி, நறுமணப் பொருள்கள் மற்றும் தோட்ட உற்பத்தி (காபி, தேயிலை, நறுமணப் பொருள்கள்) ஆகிய குறிப்பிட்ட துறைகளின் ஏற்றுமதிகளில் கவனம் செலுத்தப்படும்.
குறிப்பாக, தரம், பாரம்பரியம், தொழில்நுட்பம், மதிப்பு மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.
பல்வேறு துறைகள் வெவ்வேறான வழிகளில் தனிப்பட்ட அடையாளங்களை வெளிப்படுத்தி வருகின்றன. அதற்கு மாற்றான, சீரான பிரசாரத்தின் அணுகுமுறை தற்போது அவசிய தேவையாக மாறியுள்ளது என்றாா் அவா்.