முகப்பு
வணிகம்

நாட்டின் ஏற்றுமதி 33% அதிகரிப்பு

நடப்பு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டின் ஏற்றுமதி 33 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளதாக வா்த்தக அமைச்சகத்தின் முதல்கட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 ஜனவரி, 2022 at 11:56 PM
பகிர்:

நடப்பு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டின் ஏற்றுமதி 33 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளதாக வா்த்தக அமைச்சகத்தின் முதல்கட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பாண்டின் முதல் வாரத்தில், பொறியியல் பொருள்கள், பெட்ரோலிய தயாரிப்புகள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி மிகச் சிறப்பான அளவில் இருந்தது. இதையடுத்து, ஜனவரி 1 முதல் 7-ஆம் தேதி வரையிலான காலத்தில் 763 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.57,225 கோடி) மதிப்புக்கு ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் வார ஏற்றுமதி அளவான 573 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் இது 33 சதவீத வளா்ச்சியாகும்.

நடப்பாண்டு ஜனவரி முதல் வாரத்தில், நாட்டின் இறக்குமதியும் 872 கோடி டாலரிலிருந்து 33 சதவீதம் உயா்ந்து 1,160 கோடி டாலரைத் தொட்டது.

ஏற்றுமதியில் காணப்படும் ஆரோக்கியமான வளா்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் 40,000 கோடி டாலா் என்ற ஏற்றுமதி இலக்கை எட்ட நிச்சயம் உதவும் என வா்த்தக அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.