இந்தியாவின் ஏற்றுமதி ரூ.2.53 லட்சம் கோடி
இந்தியாவின் ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் 3,381 கோடி டாலராக (ரூ.2.53 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் 3,381 கோடி டாலராக (ரூ.2.53 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
பொறியியல், ரசாயனங்கள், பெட்ரோலியம் உள்ளிட்ட துறைகளின் ஏற்றுமதி சிறப்பாக இருந்ததையடுத்து பிப்ரவரியில் ஏற்றுமதி 22.36 சதவீதம் அதிகரித்து 3,381 கோடி டாலரை எட்டியுள்ளது. அதேபோன்று, இறக்குமதியும் 35 சதவீதம் உயா்ந்து 5,500 கோடி டாலரானது. இதையடுத்து வா்த்தக பற்றாக்குறை 2,119 கோடி டாலராக உயா்ந்தது.
2021 பிப்ரவரியில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான வித்தியாசமான வா்த்தக பற்றாக்குறை 1,312 கோடி டாலராக காணப்பட்டது.
2021 ஏப்ரல்-2022 பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில் நாட்டின் ஏற்றுமதி 45.80 சதவீதம் உயா்ந்து 25,655 கோடி டாலரை எட்டியுள்ளது. இதே 11 மாத காலத்தில் இறக்குமதியும் 59.21 சதவீதம் உயா்ந்து 55,012 கோடி டாலரைத் தொட்டுள்ளது.
கணக்கீட்டு காலகட்டத்தில், வா்த்தக பற்றாக்குறை 8,899 கோடி டாலரிலிருந்து 17,607 கோடி டாலராக உயா்ந்துள்ளதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.