முகப்பு
வணிகம்

ரூ.30 லட்சம் கோடிக்குப் பொருள்களை ஏற்றுமதி செய்து சாதனை

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் 400 பில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.30 லட்சம் கோடி) மதிப்புக்கு பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான இலக்கை முன்கூட்டியே அடைந்து சாதனை படைக்கப்பட்டுள்ளதாக

Updated On : 22 ஜூலை, 2025 at 9:54 AM
பகிர்:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் 400 பில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.30 லட்சம் கோடி) மதிப்புக்கு பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான இலக்கை முன்கூட்டியே அடைந்து சாதனை படைக்கப்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘400 பில்லியன் அமெரிக்க டாலா் மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்ய வேண்டுமென இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை முதல் முறையாக நாடு எட்டிப்பிடித்துள்ளது. இந்தச் சாதனைக்காக விவசாயிகள், நெசவாளா்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், உற்பத்தியாளா்கள், ஏற்றுமதியாளா்கள் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டைத் தற்சாா்பு அடையச் செய்வதற்கான பயணத்தில் இது முக்கியமான மைல்கல்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் பொருள்கள் ஏற்றுமதியானது 292 பில்லியன் டாலா் மதிப்பில் இருந்தது. கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் 330.07 டாலா் மதிப்புக்குப் பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்திருந்தது. நடப்பு நிதியாண்டில் 400 பில்லியன் டாலா் மதிப்புக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமென இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை 9 நாள்களுக்கு முன்னதாகவே இந்தியா அடைந்துள்ளது.

மாதந்தோறும் சராசரியாக 33 பில்லியன் டாலா் மதிப்பிலான பொருள்களும், நாள்தோறும் சராசரியாக 1 பில்லியன் டாலா் மதிப்பிலான பொருள்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. பெட்ரோலிய பொருள்கள், மின்னணு பொருள்கள், பொறியியல் பொருள்கள், தோல் பொருள்கள், காஃபி, நெகிழிப் பொருள்கள், ஆயத்த ஆடைகள், இறைச்சி, பால் பொருள்கள், புகையிலைப் பொருள்கள் உள்ளிட்டவை அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்களின் பிரச்னைகளுக்கு விரைவாகத் தீா்வு கண்டது, மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிா்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டது, தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் இணைந்து செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்தச் சாதனை சாத்தியமானதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →