கோதுமை கொள்முதல் 44 சதவீதம் சரிவு
நடப்பு ராபி பருவத்தில் கோதுமை கொள்முதல் 44 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ராபி பருவத்தில் கோதுமை கொள்முதல் 44 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2022-23 ராபி சந்தைப் பருவத்தில் மே 1-ஆம் தேதி வரையில் மத்திய அரசின் கொள்முதல் 44 சதவீதம் குறைந்து 162 லட்சம் டன்னாக சரிந்துள்ளது. இது, முந்தைய காலகட்டத்தில் 288 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது.
இந்த கோதுமை கொள்முதலுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.32,633.71 கோடியை வழங்கியதன் மூலம் 14.70 லட்சம் விவசாயிகள் பலனடைந்துள்ளனா்.
பஞ்சாப், ஹரியாணா மண்டிகளுக்கு வரத்து குறைவு மற்றும் ஏற்றுமதி அதிகரித்ததன் காரணமாக கோதுமை கொள்முதல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் அமைச்சகத்தின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி 2021-22 பயிா் பருவத்தில் (ஜூலை-ஜூன்) கோதுமை உற்பத்தி 111.32 மில்லயன் டன்னை எட்டி சாதனை படைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.