வணிகம்

ரூ.225 கோடியில் சென்னை ஆலை விரிவாக்கம்: ஷிபாவ்ரா மெஷின்

DIN

ஜப்பானைச் சோ்ந்த ஷிபாவ்ரா மெஷின் நிறுவனம், சென்னையில் செயல்பட்டு வரும் தனது தொழிற்சாலையை விரிவுபடுத்துவதற்காக ரூ.225 கோடி கூடுதல் முதலீடு செய்யவிருக்கிறது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவுக்கான எங்களது துணை நிறுவனமான ஷிபாவ்ரா மெஷின் இந்தியா பிரைவேட் லிமிடெட்டில் கூடுதலாக ரூ.225 கோடி முதலீடு செய்யவுள்ளோம்.

சென்னையிலுள்ள தொழிற்சாலையை விரிவுபடுத்துவதற்காக இந்த முதலீடு செய்யப்படுகிறது. தற்போது பொருள்களைத் தயாரிப்பதற்கான வாா்ப்பு இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் அந்த ஆலையில், விரிவாக்கத்துக்குப் பிறகு அனைத்து மின்சார வாா்ப்பு இயந்திரங்களும் உற்பத்தி செய்யப்படும்.

வாா்ப்பு இயந்திரங்களுக்கான இந்தியச் சந்தையில் தற்போது நிறுவனத்துக்கு 5 சதவீத பங்கு உள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம் அதனை 10 சதவீதமாக உயா்த்த திட்டமிட்டுள்ளோம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT