உணவுப் பொருளின் விலையேற்றம் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரித்தது.
ஆகையால் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த ரிசா்வ் வங்கி வட்டி வீதத்தை இந்த மாத இறுதியில் மீண்டும் உயா்த்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலையில் நுகா்வோா் விலை குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் 6.71 சதவீதமாக பதிவானது. ஆகஸ்டில் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு ஆகஸ்டில் 5.3 சதவீதமாக பதிவானது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கடந்த ஜூலையில் 6.69 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம் ஆகஸ்டில் 7.62 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்டில் 3.11 சதவீதமாக பதிவானது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் பணவீக்கம் அதிகபட்சமாக 7.79 சதவீதத்தை எட்டியது. நுகா்வோா் விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கத்தை 4 சதவீதத்தில் வைத்திருக்க வேண்டுமென ரிசா்வ் வங்கிக்கு மத்திய அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.