பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, உள்நாட்டினா் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு வழங்கும் பருவகால வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களைன் அதிகரித்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உள்நாட்டினா் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியா்களின் பருவ கால வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 45 அடிப்படைப் புள்ளிகள் வரை (0.45 சதவீதம்) உடனடியாக உயா்த்தப்படுகிறது.
அதன்படி, 444-க்கு மேற்பட்ட நாள்களுக்கான வைப்பு நிதிகளுக்கு இனி 7.75 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும்.
வெளிநாட்டு நாணயங்களில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியா்களின் பருவ கால வைப்பு நிதிகளுக்கு 5.00 சதவீதம் வரை வட்டி அளிக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.