வணிகம்

பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் 43% உயர்வு!

பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் வங்கியின் மூன்றாவது காலாண்டு நிகர லாபம் 43 சதவீதம் அதிகரித்து ரூ.269 கோடியாக உள்ளது.

DIN


புதுதில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் வங்கியின் மூன்றாவது காலாண்டு நிகர லாபம் 43 சதவீதம் அதிகரித்து ரூ.269 கோடியாக உள்ளது.

நடப்பு நிதி ஆண்டு டிசம்பர் 31, 2022 உடன், முடிவடைந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையான மூன்றாவது காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் ஃபைனான்ஸ் 43 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் 2021-22 அக்டோபர்-டிசம்பர் காலத்தில் ரூ.188 கோடியாக இருந்தது.

அதே வேளையில் டிசம்பர் 31, 2022 நிலவரப்படி சொத்து கடன் ரூ.58,034 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டு ரூ.57,845 கோடியாக இருந்ததுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிரிஷ் கௌஸ்கி கூறுகையில், வங்கியின் சில்லறை கடன் பிரிவில் நிறுவனம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்றார். 113 நகரங்களில் 159 கிளைகளைக் இந்நிறுவனம் கொண்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தை இன்றைய வர்த்தகத்தில் பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் பங்குகள் ரூ.556.90 ஆக வர்த்தகமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT