வணிகம்

2026-ல் மடிக்கக்கூடிய திரையுடைய மேக்புக்: ஆப்பிள்!

மடிக்கக்கூடிய திரையுடன் கூடிய மேக்புக் வகை கணினியை 2026ஆம் ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

DIN

மடிக்கக்கூடிய திரையுடன் கூடிய மேக் புக்வகை கணினியை 2026ஆம் ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் பல முன்னணி மின்னணு சாதனங்களைத் தயாரித்து வருகிறது. 

இந்நிலையில் மடிக்கக்கூடிய திரையுடன் கூடிய ஆப்பிள் நிறுவனத்தின் மேக் புக் கூடிய விரைவில் அறிமுகமாகவுள்ளது. ஆப்பிள் நிறுவனம் மேக் புக் எனும் மேம்பட்ட மென்பொருள் உடைய கணினியை 2006ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அதில் பல்வேறு அம்சங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்டன. 

மென்பொருள் சந்தையில் தற்போது மடிக்கக்கூடிய கணினிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் மடிக்கக்கூடிய மேக் புக்கை தயாரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. 

மடிக்கக்கூடிய திரைக்காக சாம்சங் அல்லது எல்ஜி நிறுவனத்துடன் ஆப்பிள் கைக்கோர்க்கவுள்ளது.  ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய மேக்புக் 2025ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக 2026ஆம் ஆண்டு சந்தைக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT