கோப்புப் படம் 
வணிகம்

சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்வு! 20,000-யைக் கடந்த நிஃப்டி!!

பங்குச்சந்தை இன்று(புதன்கிழமை) ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.

DIN

பங்குச்சந்தை இன்று(புதன்கிழமை) ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன.

நேற்று(செவ்வாய்க்கிழமை) 66,174.20 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 66,381.26 என்ற புள்ளிகளில் தொடங்கியது. 

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 727.70 புள்ளிகள் உயர்ந்து 66,901.91 என்ற புள்ளிகளில் நிறைவுற்றது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 206.90 புள்ளிகள் உயர்ந்து 20,096.60 புள்ளிகளில் முடிந்தது.

ஹீரோ மோட்டோகார்ப், எம் & எம், ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டின.

ஓஎன்ஜிசி, நெஸ்லே இந்தியா, ஈச்சர் மோட்டார்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இறக்கம் கண்டன. 

எனினும், ரியல் எஸ்டேட் தவிர, மற்ற அனைத்துத் துறைகளும் இன்று ஏற்றம் கண்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT