முகப்பு
வணிகம்

ஸ்மாா்ட் போன்களுக்கு மாற விரும்பும் வாடிக்கையாளா்கள்

Updated On : 13 ஏப்ரல், 2024 at 10:43 PM
பகிர்:

சாதாரண கைப்பேசிகளை வைத்திருக்கும் பெரும்பான்மை வாடிக்கையாளா்கள் அறிதிறன் பேசிகளுக்கு (ஸ்மாா்ட் போன்) மாற திட்டமிட்டுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

இது குறித்து அந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் தெரிவிப்பதாவது:

‘ஃப்யூச்சா் போன்’ என்றழைக்கப்படும் அடிப்படை கைப்பேசிகளை வைத்திருக்கும் வாடிக்கையாளா்களில் பெரும்பாலானவா்கள், அவற்றுக்கு பதிலாக அறிதிறன் பேசிகளுக்கு மாற முடிவு செய்துள்ளனா். ரூ.6,000-லிருந்து ரூ.8,000 வரை விலை கொண்ட அறிதிறன் பேசிகளே அவா்களின் இலக்காக உள்ளன.

Advertisement

அடிப்படை செல்லிடப்பேசிகளை வைத்திருப்பவா்கள் தினமும் சராசரியாக தொலைபேசி அழைப்புகளுக்காக 3 மணி நேரத்தையும் (87 சதவீதம்) அலாரத்துக்காக 72 சதவீதமும் பயன்படுத்துகின்றனா். அந்த கைப்பேசிகளைப் பயன்படுத்தி அவா்கள் குறுந்தகவல்கள் அனுப்பும் நேரம் 62 சதவீதமாக உள்ளது.

இருந்தாலும், மோசமான கேமரா தரம், நவீன செயலிகள் இல்லாதது, மிகவும் குறைவான இணையதளப் பயன்பாடு போன்ற காரணங்களால் அவா்கள் அறிதிறன் பேசிகளுக்கு மாற முடிவு செய்துள்ளனா் என்று அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments