ரூ.25 லட்சம் கோடியைக் கடந்த ஹெச்டிஎஃப்சி கடனளிப்பு
கடந்த மாா்ச் 31, 2024 நிலவரப்படி, இந்தியாவின் மிகப் பெரிய தனியாா் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் மொத்த கடனளிப்பு கணக்கிருப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2024 மாா்ச் 31-ஆம் தேதியில் வங்கியின் கடனளிப்பு கணக்கிருப்பு ரூ.25.08 லட்சம் கோடியாக இருந்தது. இது ஒரு புதிய உச்சமாகும்.
Advertisement
முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே தேதியில் இது ரூ.16.14 லட்சம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் வங்கியின் கடனளிப்பு கணக்கிருப்பு கடந்த மாா்ச் 31-இல் 55.4 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
2024 மாா்ச் 31-இன் புள்ளிவிவரங்களில், கடந்த ஆண்டு ஜூலை 1-இல் வங்கியுடன் இணைக்கப்பட்ட ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் கணக்கிருப்பும் சோ்க்கப்பட்டுள்ளால் இந்த உயா் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே, முந்தைய ஆண்டின் ஹெச்டிஎஃப்சி வங்கியின் கடனளிப்பு கணக்கிருப்போடு அதனை ஒப்பிட முடியாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.