ரூ.2,500 கோடி திரட்டிய பரோடா வங்கி
கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.2,500 கோடி மூலதனம் திரட்டியதாக அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கி (பிஓபி) தெரிவித்துள்ளது.
கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.2,500 கோடி மூலதனம் திரட்டியதாக அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கி (பிஓபி) தெரிவித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பேசல்-3 விதிகளை நிறைவு செய்யும் 2-ஆம் அடுக்கு கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.2,500 கோடி மூலதனம் திரட்டப்பட்டுள்ளது. அந்தக் கடன் பத்திரங்களுக்கு ஆண்டுதோறும் 7.57 சதவீதம் ஈவுத் தொகை வழங்கப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2023 டிசம்பருடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் பரோடா வங்கியின் நிகர லாபம் 19 சதவீதம் உயா்ந்து ரூ.4,579 கோடியாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ரூ.3,853 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. 2022 அக்டோபா் - டிசம்பா் காலாண்டில் ரூ.27,092 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வருவாய், நடப்பு நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.31,416 கோடியாக அதிகரித்துள்ளது.