ஐஷர் மோட்டார்ஸ்: ரூ.15 லட்சம் செலுத்த உத்தரவு!
ஹரியானா அதிகாரிகளிடமிருந்து ரூ.15 லட்சம் ஜிஎஸ்டி கேட்பு உத்தரவை பெற்றுள்ளதாக ஐஷர் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
புதுதில்லி: ஹரியானா அதிகாரிகளிடமிருந்து ரூ.15 லட்சம் ஜிஎஸ்டி செலுத்துவதற்கான உத்தரவை பெற்றுள்ளதாக ஐஷர் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
ஹரியானா வார்டு -5, குர்கான் கிழக்கு, கலால் மற்றும் வரிவிதிப்பு அதிகாரி அலுவலகத்திலிருந்து ஜிஎஸ்டி கோரிக்கை உத்தரவைப் பெற்றுள்ளதாக நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.
மொத்தம் ரூ.15 லட்சத்திற்கான உத்தரவில் ரூ.5 லட்சம் வரியும், ரூ.9 லட்சம் வட்டியும், தலா ரூ.1 லட்சம் அபராதம் இதில் அடங்கும் என்று தனது ஒழுங்குமுறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
தற்போது, இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்த அனைத்து வாய்ப்புகளையும் நிறுவனம் மதிப்பீடு செய்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.