அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதையடுத்து அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் அரசு செலவினங்களுக்கான எதிர்பார்ப்புகளை உயர்த்தியுள்ளது. இது அமெரிக்க நிதிப் பற்றாக்குறையை சரிசெய்யும், அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி!
டாலர் மதிப்பு உயர்ந்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.
ஒரு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 84.25 ஆகக் குறைந்துள்ளது. பின்னர் சற்று நேரத்தில் 84.18 ஆக அதிகரித்தது.
இதையடுத்து இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த அந்நியச் செலாவணி சந்தையில் ரிசர்வ் வங்கி தலையிடலாம் என்று தெரிகிறது.
அதேபோல மெக்சிகன் நாட்டின் பெசோ, ஜப்பானின் யென் மற்றும் யூரோ ஆகியவற்றின் மதிப்புகளும் குறைந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.